வெட்கமிழந்த மானிடம்
பூகோள அரசு
பங்கிட்ட பசுமைக்குடையிலும்
இலாபம் கண்டு
துட்டுக்குத் துண்டாக்கி
இலதாய் ஆக்கிய பிராண வாயு,
கண்டல் வடித்த கண்ணீராய்
பிரபஞ்சம் எங்கும்..
பூமி வெடிப்பும்
பூகோள நாடகமும்
ஒத்திகை பாராது அரங்கேறுபவை…
~வட்டக்காட்டாள்~