நவரத்தினம் ஐங்கரன்
(காவலாளி, நெடுந்தீவு மகா வித்தியாலயம், உரிமையாளர்- அபிஷாளினி ரான்ஸ்போட்)
நெடுந்தீவு கிழக்கு 12 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் ஐங்கரன் (காவலாளி, நெடுந்தீவு மகா வித்தியாலயம், உரிமையாளர்- அபிஷாளினி ரான்ஸ்போட்) அவர்கள் 25.02.2025 செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் சரஸ்வதி (மருது) இணையரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் அன்பரசி இணையரின் பாசமிகு மருமகனும், டுஷ்யந்தினி அவர்களின் அன்பு கணவரும் அபிஷாளினி, சதுர்ஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் கேதீஸ்வரன் சயந்தினியின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளையதினம் (27.02.2025) வியாழக்கிழமை பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக் கிரியைக்காக கட்டுராமன் சல்லி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்.