நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு காற்றின்தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சிநிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128ற்கு இடைப்பட்ட அளவில்உள்ளது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவைமற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமானமட்டத்தில் காணப்படும்.
இதற்கமைய தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தவரைஅனைவரும் முகக் கவசங்களை அணியுமாறும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால்உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.