மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட12 மியன்மார் அகதிகளும் நேற்று (ஜனவரி07) விடுதலையாகி கேப்பாபுலவுஇடைத்தங்கல் முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்குசெயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில்முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த12 பேரும் நேற்று விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில்வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்கஅழைத்து வரப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன்
மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வரமுடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படைதளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர்அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில்தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும்
மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாதகாரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும்முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாகதங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது