யாழ் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச-06) ஞாயிற்றுக் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து திரும்பியுள்ளார். அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கொழும்பில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து புலோலியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். புலோலியிலும்