புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கவிருக்கையில், பெற்றோர்கள் பாடசாலை உபகரணங்கள் மற்றும் எழுதுப்பொருட்களை வாங்குவதில் ஆவலுடன் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில உபகரணங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலைக்கு தீர்வு காண, பாடசாலை உபகரணங்களுக்கான வரியை அரசாங்கம் நீக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் பரிந்துரைக்கிறது.
எழுதுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.