பேருந்து பயணத்தின் போது நடத்துனர்கள் மிதிபலகையில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக உள்ள பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
இதனால், இனி மிதிபலகையில் பயணிக்கும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேருந்து சேவையில் காணப்படும் கடுமையான போட்டியின் விளைவாக சில நடத்துனர்கள் கவனக்குறைவுடன் மிதிபலகையில் பயணம் செய்வதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனையின் அடிப்படையில், இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கும் வகையில் இந்த தடை அமல்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.