2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும்புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக பின்னர் ஒருதிகதியில் சமர்ப்பிக்கப்படவும் உள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கானவேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்சட்டத் திருத்தச் சட்டமூலம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும்உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவிற்கு அமைய அரச வர்த்தமானியில்வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டமூலத்தின் பிரகாரம், 2023 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்தஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்செல்லுபடியாகாது.
ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவேட்பாளர்களைப் பொறுத்தவரையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைத்திரும்பப் பெறவும் இந்த வர்த்தமானி வழிவகை செய்கிறது.
அதற்கான சட்டமூலம் நாடாளுமன்ற்த்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டபின்னர் இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும்திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.
அந்தத் திகதியானது மேற்படி சட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்குமுந்திய திகதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.