By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இலங்கை பெண் மீது கொண்ட பாசம்; அஞ்சலி செலுத்த இலங்கை வந்திருந்த துபாய் நாட்டவர்கள்!
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > இலங்கை பெண் மீது கொண்ட பாசம்; அஞ்சலி செலுத்த இலங்கை வந்திருந்த துபாய் நாட்டவர்கள்!
இலங்கைச் செய்தி

இலங்கை பெண் மீது கொண்ட பாசம்; அஞ்சலி செலுத்த இலங்கை வந்திருந்த துபாய் நாட்டவர்கள்!

SUB EDITOR
Last updated: 2021/07/01 at 8:55 AM
Published July 1, 2021 16 Views
Share
3 Min Read
SHARE
துபாய் நாட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவந்த இலங்கை பெண்ணொருவரின் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த, துபாயில் பெண் தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் உட்பட ஆறு பேர் இலங்கை வந்திருந்தனர்.
துபாயில் இருந்து வந்தவர்கள் அம்மா, அம்மா என்று அழுதபடி இலங்கை பெண்ணின் சவப்பெட்டி தோளில் சுமந்து சென்றதுடன் முஸ்லிம் மக்களின் முறைப்படி அந்தப் பெண்ணின் அடக்கஸ்த்தலத்தில் அமர்ந்து குர்ஆன் ஒதிய காட்சி அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. இந்த சம்பவம் ஜா-எல கப்புவத்தை பகுதியில் நடந்துள்ளது. கப்புவத்தை பிரதேசத்தை சேர்ந்த சாந்தி பெரேரா என்ற இந்த பெண் நான்கு பிள்ளைகளை பராமரிக்கும் சேவைக்காக கடந்த 1981 ஆம் ஆண்டு துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற பின்னர் மேலும் நான்கு பிள்ளைகள் என எட்டு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. சாந்தி திருமணமாகாதவர். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சாந்தி நல்ல முறையில் நிறைவேற்றி வந்துள்ளார். 38 ஆண்டுகளாக சாந்தி, துபாய் நாட்டில் ஒரே வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சாந்திக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளது. துபாய் வீட்டின் உரிமையாளர்கள் அவரை இலங்கைக்கு அனுப்பி வைக்காது அங்கு வைத்தே சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
சாந்தி சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் அவரது சகோதரர் துபாய் வந்து செல்ல பயண ஏற்பாடுகளையும் அவர்கள் இலவசமாகசெய்து கொடுத்துள்ளனர். எவ்வளவு சிகிச்சை செய்தும் சாந்தியின் உடல் நிலை தேறாத காரணத்தினால், அவரை பராமரிக்க இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரை வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். எனினும் உடல் நிலை குணமாகாத காரணத்தில் சாந்தியின் கோரிக்கைக்கு அமைய இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு வர வேண்டும் என்ற உறுதிமொழியுடன் சாந்தியை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர்.
இலங்கைக்கு அழைத்து வந்து சாந்தியின் சகோதரரிடம் ஒப்படைத்த துபாய் நாட்டில் சாந்தி, தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர்கள் குணமடைந்ததும் மீண்டும் தமது வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து விட்டு திரும்பிச் சென்றுள்ளனர். சாந்திக்கு அவரது சகோதரர் முடிந்த அனைத்து சிகிச்சைகளையும் செய்துள்ளார்.
எனினும் நாளுக்கு நாள் உடல் மோசமடைந்து வந்ததுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சாந்தி இறக்கும் வரை வருடந்தோறும் துபாய் நாட்டில் இருந்து வந்து சாந்தியை பார்த்து விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், அண்மையில் சாந்தி இறந்த செய்தி கிடைத்ததும் சாந்தி வளர்த்த பிள்ளைகள் மற்றும் வீட்டின் உரிமையாளர் என 6 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் சாந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தவாறு அம்மா, அம்மா என அழுது புலம்பியுள்ளனர். சாந்தியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர், புதைகுழிக்கு அருகில் 6 பேரும் தம்மை வளர்த்த வளர்ப்பு தாயின் ஆத்மா சாந்தியடைய இஸ்லாம் முறைபடி குர் ஆனை ஓதியுள்ளனர்.
பெற்றோரை வீதியில் விட்டுச் செல்லும் பிள்ளைகள் உள்ள நாட்டில் தம்மை வளர்த்த பிற இனத்து பெண்ணுக்கு துபாய் நாட்டில் இருந்து வந்து மனமுருகி இறுதி அஞ்சலியை செலுத்தியது சம்பவம் அனைவரையும் நெகிழ செய்துள்ளது.

You Might Also Like

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

SUB EDITOR July 1, 2021
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக கீதநாத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
Next Article அம்மா பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

இலங்கைச் செய்தி

அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

January 28, 2023
இலங்கைச் செய்தி

ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

கடவுச்சீட்டில் கொண்டுவரப்படவுள்ள அதிரடி மாற்றம்!

January 28, 2023
இலங்கைச் செய்தி

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளன.

January 26, 2023
இலங்கைச் செய்தி

சற்றுமுன் வெளியாகியது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவி விலகல்!

January 25, 2023
இலங்கைச் செய்தி

45 ஆயிரத்துக்கு மேல் வருமானம் கொண்டோருக்கு வரி!

January 25, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?